டெல்டா பாசனத்திற்கு 7 டிஎம்சி நீரை உடனடியாக திறக்கவேண்டும்.. சித்தராமையாவுக்கு எடப்பாடியார் கடிதம்!
தமிழக விவசாயிகளின் பாசனத்திற்கு 7 டிஎம்சி நீரை உடனடியாக திறக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை: தமிழக விவசாயிகளின் பாசனத்திற்கு 7 டிஎம்சி நீரை உடனடியாக திறக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் தமிழகத்தில் பயிர் பாசனத்திற்காக கர்நாடக அரசு குறைந்த பட்சம் 15 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

டெல்டா விவசாயிகளின் நலனுக்காக கர்நாடகா உடனடியாக 7 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என தெரிவித்துள்ளார். தமிழகத்துக்கான எஞ்சிய காவிரி நீரை 2 வாரங்களில் கர்நாடகா திறந்துவிட வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் பாசனங்கள் முடிந்துள்ள நிலையில் அங்குள்ள அணைகளில் 40.82 டிஎம்சி தண்ணீர் உள்ளது என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். மேட்டூர் அணையில் 21.27 டிஎம்சி தண்ணீர் மட்டுமே தண்ணீர் உள்ளது என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications