அனைத்துக்கட்சி கூட்ட விருந்தோம்பல்: எதிர்க்கட்சித் தலைவர்களை நேரில் உபசரித்த முதல்வர் எடப்பாடியார்!
அனைத்துக்கட்சி கூட்ட விருந்தோம்பலில் எதிர்க்கட்சித் தலைவர்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று உபசரித்தார்.
Recommended Video

சென்னை: அனைத்துக்கட்சி கூட்ட விருந்தோம்பலில் எதிர்க்கட்சித் தலைவர்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று உபசரித்தார்.
காவிரி விவகாரம் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், துரைமுருகன், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், மதிமுக பொதுச்செயலளார் வைகோ, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன், தேமுதிக சார்பில் சுதீஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பாமக சார்பில் ஏகே மூர்த்தி உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர்.

கருணாநிதிக்குப் பின்
2007ஆம் ஆண்டு திமுக தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது கடைசியாக அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று கூட்டம் நடைபெறுகிறது.

அமைச்சர்கள் வரவேற்பு
காலையில் கூட்டத்தில் பங்கேற்க வந்த எதிர்க்கட்சி தலைவர்களை தமிழக அமைச்சர்கள் வாசலில் நின்று வரவேற்றனர். தமிழக அமைச்சர்களின் இந்த நாகரீக பண்பு பெரிதும் பேசப்பட்டது.

நேரில் உபசரித்த முதல்வர்
இந்நிலையில் மூன்றரை மணி நேரம் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் உணவு இடைவேளை அளிக்கப்பட்டது. ஒரு மணி நேரம் அளிக்கப்பட்ட இந்த உணவு இடைவேளை விருந்தோம்பலில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், வைகோ உள்ளிட்டவர்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று உபசரித்தார்.

ஆலோசனைகள்
ஒரு மணிநேர உணவு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் அனைத்துக்கட்சிக் கூட்டம் தொடங்கியது. இதில் எதிர்க்கட்சிகள் தங்களின் ஆலோசனைகளை வழங்கி வருகின்றன.












Click it and Unblock the Notifications