தொடரும் 'குழந்தை தொழிலாளர்கள்' முறை - முத்துப்பேட்டையில் 3-வது முறையாக குழந்தைகள் மீட்பு

Subscribe to Oneindia Tamil

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் 4 குழந்தைத் தொழிலாளர்கள் காவல்துறையினரால் மீட்கப்பட்டனர்.

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் கடை மற்றும் ஹோட்டல்களில் வேலை பார்த்து வரும் குழந்தைத் தொழிலாளர்களை மீட்கும் பணியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பகம் மற்றும் சைல்ட் லைன் ஆகியோர் காவல் துறையுடன் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே 2 முறை 10 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

child labour recovered in muthupettai

இந்த நிலையில் நேற்று இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் பக்துவச்சலம், கனகசபை, தலைமை காவலர் பன்னீர்; செல்வம், குழந்தைகள் பாதுகாப்பக கல உதவியாளர் மகேஷ்வரி, குழந்தைகள் பாதுகாப்பு சமூக பணியாளர் அபிராமி ஆகியோர் முத்துப்பேட்டை பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுப்பட்டனர்.

இந்த சோதனையில் கடை மற்றும் ஹோட்டல்களில் வேலைப்பார்த்த காரைத்திடல், கனேஷ் மகன் விஸ்வநாத் (17), கிளார்வெளி அய்யாநாதன் மகன் ராஜா(17), பைப்பாஸ் சாலை மாரியப்பன் மகன் முத்து(16), மருதங்கவெளி சுப்பிரமணியன் மகன் சுதாகர்(15) ஆகியோர் மீட்கப்பட்டு முத்துப்பேட்டை காவல் நிலையம் கொண்டு வந்தனர். பிறகு பெற்றோர்களை அழைத்து அவர்களிடம் அறிவுரை வழங்கி மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்களை ஒப்படைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+