பள்ளித் தோழிகள் தடுத்து நிறுத்திய குழந்தைத் திருமணம்... பெற்றோருக்கு அதிகாரிகள் எச்சரிக்கை
திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் 15 வயது சிறுமிக்கு நடைபெற இருந்த குழந்தைத் திருமணம், பள்ளித் தோழிகள் அளித்த தகவலின் பேரில் தடுத்து நிறுத்தப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் கோட்டூரை அடுத்துள்ள திருப்பத்தூரில், நேபாளத்தைச் சேர்ந்த கூர்கா ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரது மகள் ரேகா (15) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) திருப்பத்தூரை அடுத்துள்ள பள்ளங்கோவில் அரசுப் பள்ளியில் கடந்தாண்டு 8-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த ஆண்டு ரேகாவை தொடர்ந்து பள்ளிக்கு அனுப்பாத அவரது பெற்றோர், பள்ளியில் இருந்து ரேகாவின் மாற்றுச் சான்றிதழ் வாங்கிச் சென்றுள்ளனர்.

15 வயதே ஆன ரேகாவிற்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர் ஏற்பாடு செய்துள்ளனர். மேலும், பண்ருட்டி பகுதியில் சிறுமியின் திருமணம் நேற்று நடைபெற இருந்ததாக கூறப்படுகிறது. திருமணம் குறித்து முன்னதாகவே அறிந்திருந்த ரேகாவின் பள்ளி தோழிகள், இது குறித்து கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர், கிராமமக்கள் இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்த மாவட்ட சமூக நல அலுவலர் புஷ்பகலா, மாவட்ட நன்னடத்தை அலுவலர் கணேசன்,உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று முன்தினம் திருப்பத்தூரில் இருந்த ரேகாவின் பெற்றோரை சந்தித்து, கட்டாயம் திருமணம் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். மேலும், ரேகாவின் பெற்றோரிடம், குழந்தைத் திருமணம் செய்யக் கூடாது என்று கையெழுத்து வாங்கிச் சென்றனர். இதன் காரணமாக நேற்று நடைபெற இருந்த குழந்தைத் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications