எம்எல்ஏவை காணவில்லை என புகார் அளிக்க சென்றவரை போலீஸ் மிரட்டியதால் பரபரப்பு
சிதம்பரம் தொகுதி எம்எல்ஏவை காணவில்லை என புகார் அளிக்கச் சென்றவரை போலீசார் மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிதம்பரம்: சிதம்பரம் தொகுதி எம்எல்ஏவை காணவில்லை என புகார் அளிக்கச் சென்ற அதிமுக பேச்சாளரை போலீசார் மிரட்டியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்று புகார் அளித்தால் பொய் வழக்கில் கைது செய்து விடுவோம் என காவல்துறை ஆய்வாளர் மிரட்டியதாக அதிமுக பேச்சாளர் ஜெயவேல் குற்றம்சாட்டியுள்ளார்.
அதிமுக எம்எல்ஏக்கள் பலர் சசிகலாவின் கட்டுப்பாட்டில் கூவத்தூர் ரிசார்ட்டில் இன்று 7வது நாளகாக அடைக்கப்பட்டுள்ளனர். ஒரு வாரமாக தொகுதி பக்கமே தலைக்காட்டாததால் பணிகள் முடங்கியுள்ளன.

அவரது செல்போன்களும் அணைத்து வைக்கப்பட்டுள்ளதால் எம்எல்ஏக்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் பொதுமக்கள் தங்கள் தொகுதி எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களை காணவில்லை என அந்தந்த தொகுதி மக்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் சிதம்பரம் தொகுதி அதிமுக எம்எல்ஏவான பாண்டியனை காணவில்லை என அக்கட்சியின் பேச்சாளர் ஜெயவேல் தலைமையில் பொதுமக்கள் புகார் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கச்சென்றார். அப்போது புகாரை வாங்க மறுத்த நகர காவல் ஆய்வாளர், இதுபோன்று புகார் அளித்தால் பொய் வழ்க்கில் கைது செய்வேன் என மிரட்டியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பொதுமக்கள் போலீசார் சசிகலாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம் சாட்டினர். தாங்கள் அளிக்கும் புகாரை போலீசார் வாங்க மறுப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
-
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications