சோ உடல் நிலையில் முன்னேற்றம்.. பொது வார்டுக்கு மாற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் மூச்சுத்திணறலால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பத்திரிகையாளர் சோ.ராமசாமியின் உடல் நலம் முன்னேற்றம் கண்டுள்ளதைத் தொடர்ந்து பொது வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பத்திரிகையாளர் சோவுக்கு கடந்த 21 ஆம் தேதி அதிகாலை திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. சளித் தொல்லையும் இருந்தது. இதையடுத்து அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்குத் தேவையான மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்த நிலையில், தற்போது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து தீவிர சிசிச்சை பிரிவில் இருந்து பொது வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications