நெல்லையில் டிரைவர் அலட்சியம்- பள்ளி வேனுக்குள் மாட்டிய சிறுவன்- 4 மணிநேர பதற்றத்துக்குப் பின் மீட்பு
திருநெல்வேலி: நெல்லை அருகே மாணவனை வேனில் இருந்து இறங்காததை கவனிக்காத ஓட்டுனர் கதவை பூட்டிச் சென்றதால் உள்ளே மாட்டிக்கொண்ட சிறுவன் 4 மணி நேரத்துக்குப் பிறகு மீட்கப்பட்டான்.
திருநெல்வேலி கடையம் அருகே உள்ள மேட்டூரைச் சேர்ந்தவர் ஸ்டீபன். இவரது மனைவி பிரேமா. இவர்களுடைய மகன் பிளசன் பாவூர்சத்திரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறான்.

வழக்கமாக பள்ளிக்கு வேனில் அழைத்துச் செல்லப்பட்டு 3.30 மணி அளவில் மீண்டும் வீட்டில் கொண்டுவந்து இறக்கிவிடப்படும் சிறுவன் நேற்று வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. ஒருவேளை பள்ளியில் ஏதேனும் நிகழ்ச்சியாக இருக்கும் என்று நினைத்த பிரேமா சிறுவனை தேடவில்லை. மாலை 6 மணி ஆகியும் சிறுவன் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் பள்ளியைத் தொடர்பு கொண்டு கேட்டனர்.
அதற்கு, சிறுவன் பள்ளியிலிருந்து மதியம் 3 மணிக்கே கிளம்பி விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் பதறிப்போன சிறுவனின் பெற்றோர்கள் அக்கம்பக்கத்தில் தேடினர். சிறுவன் கிடைக்கததையடுத்து அவரது தாய் பிரேமா அழுது புலம்பினார். ஓட்டுனருக்கு தொடர்புகொள்ள முயற்சித்தபோது அவரது எண்ணும் அனைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனால் அவரகளது சந்தேகம் மேலும் வலுத்தது.
இந்நிலையில், ஆசிரியர் ஒருவர் சிறுவன் பிளசன் சென்ற வேனைத் திருந்து தேடினார். அப்போது பிளசன் சீட்டில் தூங்கிக் கொண்டிருந்தான். இதையடுத்து பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு வந்து சிறுவனை அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து ஓட்டுனரிடம் கேட்டபோது, பிளசன் வழக்கமாக இறங்கும் இடத்தில் தான் வண்டியை நிறுத்தியதாகவும், பிளசன் இறங்கிவிட்டதாக நினைத்து வண்டியை திருப்பி பள்ளிக்கு எடுத்து வந்ததாகவும் தெரிவித்தார். இதையடுத்து இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் கவனமாக இருக்கும்படி ஆசிரியர்கள் எச்சரித்தனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications