சென்னை ஹைகோர்ட்டுக்கு நாளை முதல் “கிறிஸ்துமஸ் லீவ்” தொடக்கம்!
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நாளையில் இருந்து கிறிஸ்துமஸ் விடுமுறை தொடங்கும் காரணத்தினால் அவசர வழக்குகளுக்கான விசாரணை குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை ஹைகோர்ட், தலைமை பதிவாளர் பொன்.கலையரசன் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில், "கிறிஸ்துமஸ்' பண்டிகையை முன்னிட்டு, வருகிற 24 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரையிலும், 2015 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரையிலும் ஹைகோர்ட்டுக்கு விடுமுறை விடப்படுகிறது.

இந்த விடுமுறை நாட்களில், அவசர வழக்குகளை சென்னை ஹைகோர்ட்டில், நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், கே.கல்யாணசுந்தரம் ஆகியோரும், ஹைகோர்ட்டு மதுரை கிளையில் நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஆர்.மகாதேவன் ஆகியோரும் விசாரிப்பார்கள்.
இந்த விடுமுறை நாட்களில், தாக்கல் செய்யப்படும் வழக்குகளை நீதிபதிகள் வருகிற 30 ஆம் தேதி ஹைகோர்ட் மற்றும் ஹைகோர்ட் மதுரை கிளையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வார்கள். எனவே, வழக்குகளை 29 ஆம் தேதிக்குள் ஹைகோர்ட் பதிவு பிரிவில் தாக்கல் செய்யவேண்டும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications