கிறிஸ்டி நிறுவன ஊழல் எதிரொலி.. ரூ. 100 கோடி மதிப்புள்ள முட்டை டெண்டர்கள் ரத்து
கிறிஸ்டி நிறுவன ஊழல் காரணமாக தற்போது தமிழகத்தில் ரூ. 100 கோடி மதிப்புள்ள முட்டை டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: கிறிஸ்டி நிறுவன ஊழல் காரணமாக தற்போது தமிழகத்தில் ரூ. 100 கோடி மதிப்புள்ள முட்டை டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கிறிஸ்டி ஃபிரைடுகிராம் தலைமையகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஐந்தாவது நாளாக சோதனை செய்தனர். அவர்கள் கூட்டுறவு வங்கியில் முறைகேடாக ரூ.245 கோடி டெபாசிட் செய்தது அம்பலம் ஆகியுள்ளது. அரசு பள்ளிகள், அங்கன்வாடிகளுக்கு சத்துணவு பொருட்கள் அனுப்பி வைக்கும் பணியை செய்து வந்தது கிறிஸ்டி ஃபிரைடுகிராம் நிறுவனம்.

ஒப்பந்த அடிப்படையில் இந்த நிறுவனம் இந்த பணியை செய்து வந்தது. இதில் பல்வேறு முறைகேடுகளை செய்து, ரூ. 1,350 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளது. முதற்கட்டமாக முறைகேடாக சம்பாதிக்கப்பட்ட 10 கிலோ தங்கம், ரூ.17 கோடி பணம் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும்அவர்கள் கூட்டுறவு வங்கியில் முறைகேடாக ரூ.245 கோடி டெபாசிட் செய்தது அம்பலம் ஆகியுள்ளது. இதனால் சத்துணவு துறையில் பெரிய பிரச்சனை உருவாகி உள்ளது. இந்த நிலையில் சத்துணவு விநியோகத்திற்கு புதிய டெண்டர் விடப்பட்டது.
ஆனால் அதில் மீண்டும் கிறிஸ்டி நிறுவனமும், அவர்களுக்கு சொந்தமாக வேறு பெயரில் இயங்கும் நிறுவனங்களும் கலந்து கொண்டது. இதையடுத்து மொத்தமாக இந்த டெண்டர் கைவிடப்பட்டுள்ளது. மீண்டும் எப்போது டெண்டர் நடக்கும் என்று அறிவிப்பு வெளியாகவில்லை.












Click it and Unblock the Notifications