தமிழகம் முழுவதும் நாளை முதல் திரையரங்குகள் இயங்கும்
தமிழகம் முழுவதும் நாளை முதல் திரையரங்குகள் இயங்கும் என்று அபிராமி ராமநாதன் தெரிவித்தார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகம் முழுவதும் நாளை முதல் திரையரங்குகள் இயங்கும் என்றும் தங்கள் கோரிக்கை நிறைவேற்ற தமிழக அரசு உறுதியளித்துள்ளதாகவும் அபிராமி ராமநாதன் தெரிவித்தார்.
8 சதவீத கேளிக்கை வரியை ரத்து செய்வது. பராமரிப்பு கட்டணம் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக கடந்த 16-ஆம் தேதி முதல் சென்னையை தவிர அனைத்து இடங்களிலும் படங்கள் திரையிடப்படவில்லை.

இந்நிலையில் நேற்று முன் தினம் முதல்வரை அவரது இல்லத்தில் திரையரங்கு உரிமையாளர்கள் சந்தித்து பேசினர். இதைத் தொடர்ந்து இன்று அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, கே.சி.வீரமணி உள்ளிட்டோரை சந்தித்து திரையரங்கு உரிமையாளர்கள் சந்தித்து பேசினர்.
இதையடுத்து கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்ததை அடுத்து நாளை முதல் திரையரங்குகள் இயங்கும் என்று அபிராமி ராமநாதன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications