குழந்தைகளுக்கு மது குடிக்க வைத்து ரசிக்கும் கொடூரம்.. சிஐடியூ தலைவர் சவுந்தரராஜன் வேதனை
கரூர்: குழந்தைகளுக்கு மதுவை குடிக்க வைத்து அதனை பார்த்து ரசிக்கும் கொடூரம் தமிழகத்தில் தான் நடந்துள்ளது .இந்த கொடுமைக்கு பிறகாவது தமிழக அரசு இந்த மதுவிலக்கு கொள்கையிலே தீவிர கட்டுபாடுகளை கொண்டுவந்து படிப்படியாக மதுவிலக்கை ரத்து செய்ய வேண்டும் சி.ஜ.டி.யு மாநில தலைவரும், எம்.எல்.ஏவுமான சவுந்தரராஜன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
கரூரி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சிதுறை ஊழியர்கள் சங்க கோரிக்கை மாநாடு தனியார் அரங்கில் சி.ஜ.டி.யு மாவட்ட செயலாளர் ஜீவானந்தம் தலையில் நடைபெற்றது .இதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளை சேர்ந்த ஊரகவளர்ச்சி உள்ளாட்சிதுறை ஊழியர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சி.ஜ.டி.யு மாநில தலைவர் சவுந்தரராஜன் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் கூறும்போது, வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி நடைபெற இருக்கும் அகில இந்திய அளவில் நடைபெறும் வேலை நிறுத்தத்தில் எங்கள சங்கமும் கலந்து கொள்ளும். போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்து ஊதிய ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடந்தது. இதில் தமிழக அரசு வெறும் 5% ஊதிய உயர்வு செய்து தொழிலாளர்களை ஏமாற்றி இருக்கிறது.
அதற்காக தங்கள் கைவசம் இருக்கும் ஆளுங்கட்சி சங்கங்ளை கொண்டு அந்த தொழிலாளர்களுக்கு ஒரு அநீதியை செய்திருக்கிறார்கள். இதனால் அந்த தொழிலாளர்கள் மிகுந்த கோபத்தில் இருப்பதால் அந்த கோபத்தினை விரைவில் வெளியே கொண்டு வருவார்கள்.

கடந்த இரண்டு நாட்களாக குழந்தைகளுக்கு மதுவை குடிக்க வைத்து அதனை பார்த்து ரசிக்கும் கொடூரம் நடந்துள்ளது. இந்த கொடுமைக்கு பிறகாவது தமிழக அரசு இந்த மதுவிலக்கு கொள்கையிலே தீவிர கட்டுப்பாடுகளை கொண்டு வந்து படிப்படியாக மதுவிலக்கை ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தில் மிகப் பெரிய தீமையை தீங்கை இது விளைவித்து கொண்டிருக்கிறது என்பதற்கான சான்று தான் இது. அதனால் அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications