நடத்துனர் இல்லாத பேருந்து சேவை.. அடுப்பில்லாமல் சமைப்பதற்கு சமம்: சிஐடியு சவுந்திரராஜன்

நடத்துனர் இல்லாத போக்குவரத்து சேவை பலனளிக்காது என்று சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    அரசு பேருந்துகளில் நடத்துனர்களை நீக்க முடிவு- வீடியோ

    கோவை: நடத்துனர் இல்லாத போக்குவரத்து சேவை பலனளிக்காது என சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவர்த்து ஊழியர் சங்க மாநில தலைவர் சவுந்தரராஜன் தெரிவித்து உள்ளார்.

    கோவையில் நல்லாயன் மண்டபத்தில் நடைபெற்ற சிஐடியு மண்டல மாநாட்டில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்க மாநில தலைவர் சவுந்திரராஜன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது-

    citu soundararajan condemned non conductor bus service

    மானிய கோரிக்கையில் போக்குவர்த்து கழகத்தை மேம்படுத்தவோ, ஊழியர்களின் பிரச்சனை குறித்தோ போக்குவரத்து துறை அமைச்சர் பேசவில்லை. தொழிலாளர்கள் நிலுவை தொகை ஐந்தாயிரம் கோடியில் இருந்து 6 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. மேலும் நடத்துனர் இல்லாத பேருந்து சேவையை ரத்து செய்ய வேண்டும். நடத்துனர் இல்லாத பேருந்து சேவை அடுப்பில்லாமல் சமைப்பதற்கு சமம்.

    தமிழக அரசு போராடுபவர்கள் மீது கடுமையாக பின்பற்றும் அடக்குமுறையை கைவிட வேண்டும். சிக்கனம் என்ற பெயரில் நடத்துனர் இல்லா பேருந்து சேவையை துவக்கியுள்ளனர். இந்த சேவை பயனளிக்காது. நாளை சிஐடியு சங்க ஊழியர்கள் பேருந்துகளை இயக்குவதற்கு முன் கையில் நடத்துனர் இல்லா சேவையை ரத்து செய்ய வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி கோஷங்கள் எழுப்பிய பின்னர் பணிக்கு செல்வர்.

    தற்போதைய மோட்டார் வாகன சட்டத்தின் படி நடத்துனர் இல்லாமல் பேருந்துகளை இயக்கமுடியாது. மத்திய அரசு இந்த திட்டத்தை கொண்டு வரும் போது கடுமையாக நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு வலுத்தது.

    இவ்வாறு சவுந்திரராஜன் தெரிவித்தார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+