சென்னை: காருக்குள் மனைவி, குழந்தைகளை வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்த கணவர் கைது
சென்னை: சென்னை நந்தனம் பகுதியில் எரிந்த காருக்குள் இருந்து படுகாயங்களுடன் மீட்கப்பட்ட பெண் மரணமடைந்தார். கணவரே பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக அந்த பெண் மரண வாக்குமூலம் அளித்ததை அடுத்து போலீசார் கணவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை தேனாம்பேட்டை ஆலயம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் நாகராஜன்,33. இவர் மனைவி பிரேமா ,29 மற்றும் மகன்கள் நிஷந்த் ராஜ்6, யுஷ்வந்த்,4 ஆகியோருடன் தனது உறவினர் காரில் நேற்று மாலை சென்று கொண்டு இருந்தார். காரை நாகராஜன் ஓட்டி சென்றார்.

நந்தனம் பகுதியில் அவர்கள் காரில் சென்று கொண்டிருந்த போது கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது . உள்ளே சிக்கி கொண்ட பிரேமா அலறி கூச்சலிட்டுள்ளார். பிரேமாவின் கூச்சலை கேட்ட அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயன்று முடியாமல் போகவே , தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர்.
ஆனால் அதற்குள் பிரேமா முழுதும் எரிந்து போனார். உடனடியாக அங்கு வந்த சைதாப்பேட்டை போலீசார் படுகாயத்துடன் இருந்த பிரேமாவை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பிரேமா பரிதாபமாக இறந்து போனார்.
அவர் மரணத்திற்கு சற்று முன் போலீசாருக்கு அளித்த மரண வாக்குமூலத்தில் தனது கணவர் நாகராஜ் தான் தன்னை பெட்ரோல் ஊற்றி எரித்ததாக வாக்குமூலம் அளித்தார்.
காருக்குள் பிரேமாவும் குழந்தைகளும் எரிந்த போது நாகராஜ் எங்கே போனார் என்ற சந்தேகம் எழவே, நாகராஜை கைது போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மனைவி, குழந்தைகளை காருடன் பெட்ரோல் ஊற்றி எரித்ததாக நாகராஜ் ஒத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
கடும் போராட்டத்துக்கு பின்னர் காரில் இருந்து மீட்கப்பட்ட குழந்தைகள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.












Click it and Unblock the Notifications