முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பு வழக்கு தலைமை நீதிபதிக்கு திடீர் மாற்றம்
மதுரை: முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பு தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான முதன்மை பெஞ்சுக்கு மாற்றியுள்ளது மதுரை உயர்நீதிமன்றக் கிளை. இதனால் இந்த வழக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பு தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் பழ. நெடுமாறன் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது...
இலங்கையில் நடந்த உள்நாட்டு போரில் பலியான ஒரு லட்சத்து 50 ஆயிரம் அப்பாவி தமிழர்களின் நினைவாக தஞ்சாவூர் மாவட்டம், விளார் கிராமத்தில் முள்ளிவாய்க்கால் முற்றம் கட்டப்பட்டது. இந்த முள்ளிவாய்க்கால் முற்றம் கடந்த நவம்பர் 6 ஆம் தேதி திறக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த நினைவு கட்டிடம், விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாகவும், பஞ்சாயத்து தெரு, நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாகவும், எனவே முள்ளிவாய்க்கால் முற்றம் கட்டுவதற்கு வழங்கப்பட்ட கட்டட அனுமதியை ஏன் ரத்து செய்யக்கூடாது? என்று விளக்கம் கேட்டு விளார் பஞ்சாயத்து தலைவர் கடந்த நவம்பர் 14 ஆம் தேதி எங்கள் அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு நோட்டீசு அனுப்பியுள்ளார்.
இந்த நோட்டீஸுக்கு இடைக்கால விளக்கம் எங்கள் அறக்கட்டளை சார்பில் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், கடந்த நவம்பர் 13 ஆம் தேதி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், போலீஸ் துணையுடன் எந்த முன்னறிவிப்பு இன்றி முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றுச்சுவர், செயற்கை நீர்வீழ்ச்சி, அலங்கார விளக்குகள், நினைவு இடத்தின் பெயர் பலகை ஆகிவற்றை இடித்து தள்ளிவிட்டனர்.
அங்கிருந்த மரங்கள், செடிகளையும் அகற்றிவிட்டனர். எனவே, இதேபோல இரவு நேரத்தில் முள்ளிவாய்க்கால் முற்றம் கட்டிடத்துக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து, அதிகாரிகள் இடித்து தள்ளிவிடுவார்கள் என்ற அச்சமும் எங்களுக்கு உள்ளது.
எனவே 14.11.2013 அன்று எங்களுக்கு வழங்கிய விளக்க நோட்டீசை ரத்து செய்யவேண்டும். முள்ளிவாய்க்கால் முற்றம் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் சசிதரன், அக்னிஹோத்ரி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. பின்னர் இந்த வழக்கை அவர்கள் தலைமை நீதிபதி ஆர்.கே.அகர்வால் தலைமையிலான பெஞ்சுக்கு மாற்றி உத்தரவிட்டனர். இந்த வழக்கோடு முள்ளிவாய்க்கால் முற்றம் தொடர்பான இதர வழக்குகளும் சேர்த்து விசாரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதி வசம் இந்த வழக்குப் போயிருப்பதால் பரபரப்பு சென்னைக்கு இடம் பெயர்ந்துள்ளது.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications