அமெரிக்க கப்பல் ஊழியர்களின் ஜாமீனுக்கு இடைக்கால தடை
தூத்துக்குடி: அமெரிக்க கப்பல் ஊழியர்கள் 35 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீனுக்கு இடைக்கால தடை விதித்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவின் 'அட்வன் போர்டு' என்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான 'சீ மேன் கார்டு' எனும் பாதுகாப்பு கப்பல் இந்திய கடல் பகுதிக்குள் ஆயுதங்களுடன் அனுமதியின்றி நுழைந்ததாக கடந்த அக்டோபர் மாதம் 12ஆம் தேதி தூத்துக்குடி அருகே பிடிபட்டது. அந்த கப்பலில் இருந்த 10 மாலுமிகள், 25 பாதுகாவலர்களை கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 35 பேர்களில் 23 பேர் சென்னை புழல் சிறையிலும், 12 பேர் பாளையங்கோட்டை சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், கப்பல் ஊழியர்கள் 35 பேரையும் ஜாமீனில் விடுவிக்கக்கோரி கப்பல் நிறுவனம் சார்பில் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், 35 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி வியாழக்கிழமை உத்தரவிட்டது.
இதையடுத்து, மாவட்ட முதன்மை நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, கியூ பிரிவு போலீசார் மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, அமெரிக்க கப்பல் ஊழியர்கள் 35 பேருக்கும் வழங்கப்பட்ட ஜாமீனுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
மேலும், கியூ பிரிவு போலீசாரின் மனு மீது மறு உத்தரவு வரும் வரை இடைக்கால தடை செல்லும் எனக்கூறிய அவர், மறு விசாரணையை ஜனவரி மாதம் 3ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாகவும் கூறி தீர்ப்பளித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications