பிள்ளையார் சதுர்த்தி மும்முரம் – “களிமண் பிள்ளையாரையே கரையுங்கள்”- திண்டுக்கல் ஆட்சியர் உத்தரவு!
திண்டுக்கல்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகளை மட்டுமே நீர்நிலைகளில் கரைக்க வேண்டும் என்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தியின்போது களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பூஜை செய்யப்பட்ட பிறகு நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம்.
இவ்வாறு கரைக்கப்படும் விநாயகர் சிலைகள் ரசாயன வண்ணப்பூச்சுகளுடன் நீர்நிலைகளில் கரைத்தால் அவை மாசுபடுகிறது.

களிமண் சிலைகள் மட்டுமே:
எனவே விநாயகர் சதுர்த்திக்கு களிமண்ணால் செய்யப்பட்டதும், சுடப்படாததும் எவ்வித ரசாயன கலவை அற்றதுமான சிலைகளை மட்டுமே வழிபாட்டுக்கு பயன்படுத்த வேண்டும்.

பெயிண்ட் கூடவே கூடாது:
இந்த சிலைகளையே நீர்நிலைகளில் கரைக்க வேண்டும். பெயிண்ட் பூசப்பட்ட சிலைகள் கரைப்பதை தவிர்க்க வேண்டும்.

10 இடங்களில் மட்டுமே:
திண்டுக்கல் மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு 10 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அந்த இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு:
பொதுமக்கள் பாரம்பரிய வழக்கப்படி சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வேண்டும் என ஆட்சியர் வெங்கடாசலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications