ராமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் சுட்டுக் கொல்லப்பட்டவரின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிதி- முதல்வர்

ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி பட்டணத்தைச் சேர்ந்த சையத் முகம்மது என்பவர் மீது அருள் தாஸ் என்பவர் கொடுத்த பொய்யான புகாரின் பேரில் போலீஸார் அவரை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணைக்குட்படுத்தினர். விசாரணையின்போது காளிதாஸ் என்ற சப் இன்ஸ்பெக்டர் திடீரென முகம்மதுவை துப்பாக்கியால் சுட்டார். மொத்தம் 3 முறை அவர் சுட்டுள்ளார். இதில் சையத் முகம்மது காவல் நிலையத்திலேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு கட்சிகளும் இந்த சம்பவத்தைக் கடுமையாக கண்டித்துள்ளன.
இந்த நிலையில், உயிரிழந்த சையத் முகம்மதுவின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிவாரண நிதி அளிப்பதாக தமிழக அரசு கூறியுள்ளது. இதுதொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து இந்த இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications