காவிரி பிரச்சினை: மார்ச் 8ல் சட்டசபை கூட்டம் - சிறப்பு தீர்மானம்
காவிரி நதிநீர் பிரச்சினைக்காக மார்ச் 8ஆம் தேதியன்று சட்டசபை கூட்டத்தை கூட்டி சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்கட்சியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சட்டசபையில் சிறப்பு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று முதல்வரிடம் எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அதன்படி மார்ச் 8ஆம் தேதியன்ற சட்டசபை கூட உள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தலைமை செயலகத்தில் சந்தித்து பேசிய ஸ்டாலின், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது காவிரி நதிநீர் பிரச்சினை பற்றி பேசி நேரம் கேட்டும் பிரதமர் சந்திக்க மறுக்கிறார். அனைத்துக்கட்சி பிரதிநிதிகளை பிரதமர் சந்திக்க மறுப்பதால் சட்டசபையை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் தாம் வலியுறுத்தியுள்ளதாக ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து திங்கட்கிழமை வரை காத்திருக்கலாம் என முதலமைச்சர் கூறியுள்ளதாகவும், திங்கள் கிழமைக்குள் பிரதமரிடமிருந்து அழைப்பு வராவிட்டால் வருகிற 8ம் தேதி சட்டமன்றம் கூட்டப்படும் என முதல்வர் உறுதி அளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
காவிரி விவகாரத்தில் பிரதமர் அனைத்து கட்சியினரை சந்திக்க மறுத்தால் அதிமுகவின் ராஜ்யசபா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் 50 பேர் திமுகவை சேர்ந்த 4 எம்.பிக்கள் உள்ளிட்ட தமிழக எம்.பிக்கள் ராஜினாமா செய்ய வலியுறுத்துவோம் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமைக்குள் பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்காவிட்டால் மார்ச் 8ஆம் தேதி சட்டசபை கூட்டப்படும் என்று முதல்வர் கூறியுள்ளார். பட்ஜெட் கூட்டத்தொடருக்காக சட்டசபை கூட உள்ள நிலையில் சிறப்பு தீர்மானத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிறைவேற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications