For Quick Alerts
For Daily Alerts
Just In
சென்னை வந்தார் முதல்வர்.. காவேரி மருத்துவமனைக்கு போகவில்லை
சேலத்தில் நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு எடப்பாடி பழனிச்சாமி சென்னை திரும்புகிறார்.
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை வந்து சேர்ந்தார். அவர் காவேரி மருத்துவமனைக்குச் சென்று கருணாநிதியை பார்ப்பார் என்று தகவல்கள் கூறுகின்றன.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை சேலத்தில் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாக இருந்தது. ஆனால் இதை காலையில் அவர் ரத்து செய்ததாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று இரவு கோவையிலிருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டு வந்தார். அவர் காவேரி மருத்துவமனைக்கு வரக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருடன் அமைச்சர்களும் வரவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
முதல்வர், அமைச்சர்கள் வருவதால்தான் மருத்துவமனைக்கு வெளியே கூடியிருந்த திமுகவினர் அகற்றப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments
English summary
CM Edappadi Palanisamy returning to Chennai by cancelling all his Salem function.