தமிழகத்தில் சுற்றுலாப்பயணிகளுக்கு அரசு தங்கும் விடுதிகள்: ஜெ., திறப்பு
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா தமிழகம் முழுவதும் சுற்றுலா பயணிகளுக்கான தங்கும் விடுதிகளை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
தமிழக அரசு ரூ.12.64 கோடி ரூபாய் செலவில் தமிழக சுற்றுலா மையங்களை மேம்படுத்தியுள்ளது. இதன் மூலம் ராமேஸ்வரத்தில் 21 அறைகளைக்கொண்ட சுற்றுலாப்பயணிகள் தங்கும் விடுதியை முதல்வர் ஜெயலலிதா காணொளி காட்சி மூலம் திறந்துவைத்துள்ளார். சுமார் 13, 175 சதுர அடி கொண்ட இந்த மையத்தை 2 கோடி ரூபாய் செலவில் கட்டியுள்ளனர்.
இதே போன்று மதுரை, கோவை மற்றும் திருச்சி மாவட்டங்களிலும் இந்து சமய அறநிலையத்துறையின் சுற்றுலா கட்டடங்களையும் திறந்துவைத்துள்ளார்.
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவிலில் 94 லட்ச ரூபாய் மதிப்பில் சிலைகள் பாதுகாப்பு மையத்தையும் திறந்து வைத்துள்ளார். இவை எல்லாவற்றையும் தலைமைச்செயலகத்தில் இருந்து காணொளிக்காட்சி மூலம் முதலமைச்சர் திறந்து வைத்தார்.