சவுதியில் கை துண்டிக்கப்பட்ட கஸ்தூரிக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி- முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை: சவுதி அரேபியாவில் வீட்டு உரிமையாளரால் கை துண்டிக்கப்பட்டதாக கூறப்பட்ட தமிழக பெண் கஸ்தூரி, விமானம் மூலம் இன்று சென்னை திரும்பினார். அவரை தமிழக அதிகாரிகள் வரவேற்றனர். இந்நிலையில் கஸ்தூரிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா ரூ.10 லட்சம் நிதி உதவி அறிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம், காட்பாடியை அடுத்துள்ள விண்ணம்பள்ளி மூங்கிலேரி கிராமத்தை சேர்ந்தவர் கஸ்தூரி. குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த ஜூலை மாதம் சவுதி அரேபியாவுக்கு வீட்டு வேலைக்காக சென்றார். அங்கு அவருக்கு அதிகப்படியான வேலை கொடுத்து, சரியாக உணவு வழங்காமல் வீட்டு உரிமையாளர் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வீட்டின் உரிமையாளரிடம் கேட்டுள்ளார்.

இது தொடர்பான பிரச்னையில் தனது வலது கையை துண்டித்த வீட்டின் உரிமையாளர், 3வது மாடியில் இருந்து இருந்து கீழே தள்ளிவிட்டதாக கஸ்தூரி குற்றம் சாட்டியிருந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை, அருகில் உள்ள வீட்டில் வசித்த இந்தியர் ஒருவர் மீட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்.
இந்த தகவலை அடுத்து கஸ்தூரியை மீட்டுக் கொடுக்கும்படி அவரது உறவினர்கள் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம், கடந்த மாதம் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் மனு அளித்தனர். இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும், அவரை இந்தியாவுக்கு அனுப்பவும் நடவடிக்கை எடுத்தனர்.
இந்நிலையில், சவுதியில் இருந்து அவர் இன்று நண்பகலில் விமானம் மூலம் சென்னை வந்தார். அப்போது கஸ்தூரியை பேட்டி எடுக்க முயன்ற செய்தியாளர்களுடன் அதிகாரிகள் தடுத்து சண்டையிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியது. இந்நிலையில் உறவினர்கள் உதவியுடன் கஸ்தூரி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட கஸ்தூரிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா ரூபாய் 10 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications