ஜல்லிக்கட்டு போராட்டத்தை கைவிடுங்கள்.. பன்னீர்செல்வம் கோரிக்கை
சென்னை: ஜல்லிக்கட்டு தொடர்பாக மாணவர்கள் மேற்கொள்ளும் போராட்டத்தை கைவிட வேண்டும் என முதலமைச்சர் பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வலியுறுத்தியும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் எனவும் தமிழகத்தில் பெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது. சமூக வலைதளங்கள் மூலம் ஒன்றிணைந்த லட்சக்கணக்கான இளைஞர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் மேற்கொள்ளும் இந்த தொடர் போராட்டத்தை கைவிட வேண்டும். ஜல்லிக்கட்டு தொடர்பாக பிரதமரை நான் சந்திக்க உள்ளேன். அவசர சட்டம் இயற்ற கோர உள்ளேன். எனவே, மாணவர்கள், இளைஞர்கள் மேற்கொள்ளும் போராட்டம் நமது உணர்வுகளை வெளிபடுத்துகிறது. போராடும் இளைஞர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிடுமாறு அன்போடு கேட்டுக் கொள்வதாகக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications