வறுமையின் பிடியில் தேயிலை விவசாயிகள்... காப்பாற்ற மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை : வறுமையின் பிடியில் சிக்கியுள்ள தேயிலை விவசாயிகளை காப்பாற்ற அதிமுக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்த மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பதிவில் கூறியுள்ளதாவது...

மலை மாவட்டமான நீலகிரியில் உள்ள தேயிலை விவசாயிகள் கடுமையான பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார்கள். பச்சைத் தேயிலையின் விலை தொடந்து குறைந்து வருவது, கடந்த மூன்று வருடங்களாக பச்சைத் தேயிலைக்கு உரிய ஆதார விலை கிடைக்காதது போன்ற காரணங்களால் இந்த விவசாயத்தை நம்பியிருக்கும் 65.000 குடும்பங்கள் வறுமையின் கோரப்பிடியில் சிக்கும் அபாயம் உருவாகியுள்ளது.
தேயிலை விவசாயிகள் தங்களின் பிள்ளைகளின் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பிற்கான கட்டணங்களைக் கட்ட முடியவில்லை. அவர்கள் கூட்டுறவு சங்கத்தில் வாங்கிய பயிர் கடனையும் அடைக்க முடியவில்லை. தேயிலை தொழிற்சாலைக்கு தேயிலையைக் கொடுத்தாலும் அவர்களும் உரிய விலையைக் கொடுப்பதில்லை.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் வற்புறுத்தலால் முன்பு ஒரு கிலோ பச்சைத் தேயிலைக்கு 2 ரூபாய் என்று மத்திய அரசு கொடுத்து வந்தது. அந்த மான்யமும் இப்போது கிடைப்பதில்லை. பச்சைத் தேயிலைக்கு குறைந்த பட்ச விலை நிர்ணயம் செய்ய கண்காணிப்புக் குழு அமைத்து முடிவு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்திரவிட்டும், இதுவரை அது போன்றதொரு குழு அமைக்கப்படவில்லை.
இது குறித்து பல முறை தேயிலை விவசாயிகள் முறையிட்டும் இதுவரை அவர்களுக்கு எந்தவிதமான நிவாரணமும் கிடைக்கவில்லை என்பது வேதனைக்குறியது. ஆகவே தேயிலை விவசாயிகளையும், அவர்களது குடும்பங்களையும் காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
குறிப்பாக, தேயிலை விவசாயிகள் பெற்ற 107 கோடி ரூபாய் கூட்டுறவுக் கடனை கழக அரசு முன்பு தள்ளுபடி செய்தது போல், இப்போதும் அவர்களின் பயிர்கடனை தள்ளுபடி செய்து, அவர்களின் பசுந்தேயிலைக்கு உரிய ஆதார விலை கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அ.தி.மு.க. அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு கூறியுள்ளார் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications