மயிலாடுதுறை மாவட்டத்துக்கு குட்நியூஸ்.. 8 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் ரூ. 48 கோடி மதிப்பிலான 47 முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கிவைத்து, புதிய திட்டப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டி வைத்துள்ள நிலையில், மயிலாடுதுறைக்கு 8 புதிய அறிவுப்புகளை வெளியிட்டுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம், மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில், ரூ. 48 கோடி மதிப்பிலான 47 முடிவுற்ற பல்வேறு திட்டப் பணிகளை முதல்வர் தொடங்கி வைத்தார். பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றினார். தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டத்துக்கான 8 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

1. மயிலாடுதுறை நீடூரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் ரூ. 85 கோடியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும்.
2. சுதந்திர போராட்ட தியாகி சாமி நாகப்பனுக்கு உருவசிலை நிறுவப்படும்.
3. தாழம்பேட்டை, வெண்ணக்கோவில் கிராமங்களில் கடற்கரையோர கட்டமைப்பு வசதிகள் ரூ.8 கோடியில் மேம்படுத்தப்படும்.
4. குத்தாலம் வாய்க்கால் ரூ.7 கோடி செலவில் புனரமைக்கப்படும்.
5. மங்கநல்லூர் - ஆடுதுறை சாலை ரூ.45 கோடியில் 2 வழி சாலையாக மேம்படுத்தப்படும்.
6. சீர்காழி நகராட்சியில் உள்ள தேர்கீழ வீதி உள்ளிட்ட 4 இடங்களில் மழைநீர் வடிகாலுடன் கூடிய சாலை மேம்பாட்டு பணிகள் ரூ.8 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
7. சீர்காழிக்கு ரூ.5 கோடி செலவில் நகராட்சி அலுவலகம் கட்டி தரப்படும்.
8. பூம்புகார் துறைமுகத்தில் ரூ.4 கோடியில் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications