களத்தில் இறங்கிய துர்கா ஸ்டாலின்.. திமுக நிர்வாகிகளுடன் தீவிர பிரச்சாரம்! பரபரக்கும் தேர்தல் களம்
மயிலாடுதுறை: தமிழ்நாடு முழுக்க தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பிரச்சாரத்தில் இறங்கியுள்ள சூழலில், முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினும் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார்.
தமிழ்நாட்டில் வரும் 23ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடக்கிறது. மாநிலத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கும் சூழலில், இப்போது தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்து அரசியல் தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார்கள். குறிப்பாக ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில் திமுக களமிறங்குகிறது.

திமுக
தமிழ்நாடு முழுக்க திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எம்பி கனிமொழி உள்ளிட்டோர் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். மேலும், திமுக நிர்வாகிகள், அமைச்சர்களும் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இதற்கிடையே இப்போது பிரச்சார களத்தில் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலினும் இணைந்துள்ளார்.
துர்கா ஸ்டாலின்
நேற்றைய தினம் மயிலாடுதுறை மாவட்டத்தில் துர்கா ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். சீர்காழி தனித் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் துர்கா ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். சீர்காழி தொகுதி திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு இந்த முறை செந்தில் செல்வன் போட்டியிடுகிறார். அவர் உதய சூரியன் சின்னத்திலேயே போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாகவே துர்கா ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.
சீர்காழி தொகுதிக்கு உட்பட்ட பழையார், மடவாமேடு, திருமலைவாசல் ஆகிய மீனவ கிராமங்களுக்கு நேரில் சென்ற துர்கா ஸ்டாலின் அங்குத் தீவிர பிரச்சாரத்தில் இறங்கினார். மடவாமேடு மீனவ கிராமத்தில் அமைந்துள்ள கன்னியம்மன் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்த துர்கா ஸ்டாலின், அங்கு மக்களிடம் துண்டுப் பிரசுரங்களைக் கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த மக்கள் துர்கா ஸ்டாலின் உடன் ஆர்வமாகப் போட்டோ எடுத்துக் கொண்டனர்.
பிரச்சாரம்
மேலும், அவர் தொடுவாய், திருமுல்லைவாசல் உள்ளிட்ட கிராமங்களுக்கும் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் குறித்து எடுத்துக் கூறினார். அங்குள்ள ஸ்ரீ செல்ல காளியம்மன் ஆலயத்தில் துர்கா ஸ்டாலின் சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து அங்கும் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அங்கிருந்த மக்கள் சிலர் கோரிக்கை மனுக்களைக் கொடுத்த நிலையில், அதையும் பெற்றுக் கொண்டார். தேர்தல் முடிந்தவுடன் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்தார்.
வீடுவீடாக சென்ற துர்கா ஸ்டாலின் பெண்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேலும் அங்கிருந்த குழந்தைகளையும் அவர் தூக்கிக் கொஞ்சினார். இதில் திமுக பொறுப்பாளர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
-
மீண்டும் திமுக ஆட்சி.. மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர்! கிட்ட கூட வராத விஜய்.. புது கருத்துக்கணிப்பு -
தொடர்ந்து சொதப்பும் விஜய்.. அடுத்தடுத்து பரப்புரை ரத்து! காரணங்களை பாருங்க! -
சொந்தமாக விவசாய நிலம் இல்லை.. எடப்பாடி பழனிசாமி சொத்து மதிப்பு என்ன? மனைவி பெயரில் எவ்வளவு உள்ளது? -
வாங்கிய பட்டங்கள் போலியா? சிக்கலில் தவெக வேட்பாளர் சத்தியகுமார்? சர்ச்சையில் பொற்கொடி? -
இவங்கதான் இப்போ லைம் - லைட்ஸ்.. தேர்தல் களத்தையே திரும்பி பார்க்க வைத்த பெண் தலைகள்.. பின்னணி -
“எனக்கு ஓட்டு போட்டா போடு.. இல்லைனா போ.. தெம்பு இருக்கிறவர நின்னு கத்தி செத்துக்கூட போவேன்” - சீமான் -
பொன்னேரியில் அந்த 1 நிமிடம்.. பேசிட்டே கதறி கதறி கண்ணீர் விட்ட பலராமனுக்கு தண்ணீர்.. ஒன்னும் புரியல -
மேலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு.. முன்னாள் எம்பி விஸ்வநாதனுக்கு வாய்ப்பு! -
"எல்லாரும் வாபஸ் வாங்குங்கள்! என்னை ஜெயிக்க வைங்க!" போட்டி வேட்பாளர்களிடம் சுயேச்சை நூதன பிரச்சாரம் -
ராணிப்பேட்டை திமுக வேட்பாளர் திடீர் மாற்றம்! மகனுக்கு பதிலாக அமைச்சர் காந்தி மீண்டும் களமிறங்குகிறார் -
2 முறை எம்எல்ஏவா இருந்தாச்சி.. இனி தம்பிக்கு விட்டு கொடு! திமுக வேட்பாளரிடம் கெஞ்சும் அதிமுக வேட்பாளர்! -
சீமானுக்கு இங்கு ஓட்டு இல்லை! காரைக்குடிக்கும் அவருக்கும் சம்பந்தம் கிடையாது - கார்த்தி சிதம்பரம்












Click it and Unblock the Notifications