ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் முதல்வர் ஓ.பி.எஸ் பிரசாரம்! தனி விமானத்தில் இன்று திருச்சி வருகை
திருச்சி: ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு முதல்வர் பன்னீர் செல்வம் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வரும் 13ம் தேதி நடக்க உள்ள நிலையில் அங்கு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
குறிப்பாக ஆளும் கட்சியான அதிமுக எம்.பி.க்கள், அமைச்சர்கள் ஒட்டுமொத்தமாக ஸ்ரீரங்கத்தில் முகாமிட்டுள்ளனர். ஸ்ரீரங்கம் தொகுதியில் இருந்து அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதால், இந்த தேர்தலை ஆளும் கட்சி கவுரவ பிரச்சினையாக பார்க்கிறது.

ஸ்ரீரங்கத்தில் அதிமுக வெற்றி பெற்றால்தான், ஜெயலலிதா மீது மக்களுக்கு கோபம் இல்லை என்ற எண்ணத்தை பிற பகுதி மக்களிடம் உருவாக்க முடியும் என்பதால், இந்த வெற்றி அக்கட்சிக்கு மிகுந்த முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஸ்ரீரங்கத்தில் பிரசாரம் செய்ய தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று இரவு தனி விமானம் மூலம் திருச்சி செல்ல உள்ளார்.அங்கிருந்து ஸ்ரீரங்கம் செல்லும் முதல்வர், நாளை முதல், கட்சி வேட்பாளர் வளர்மதிக்கு, தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட உள்ளார்.












Click it and Unblock the Notifications