சென்னை கட்டிட விபத்து... இடிந்த கட்டிடத்திற்கு அருகிலிருந்த 11 மாடி கட்டிடத்திற்கு சீல்!
சென்னை: சென்னை போரூரில் இடிந்து விழுந்த பதினோரு மாடிக் கட்டிடத்துக்கு அருகில் கட்டப்பட்டிருந்த மற்றொரு பதினோரு மாடி கட்டிடத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று மாலை சென்னையில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதில், போரூர் மவுலிவாக்கத்தில் புதிதாக கட்டப் பட்டுக் கொண்டிருந்த 11 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது.

முழுவதும் கட்டுமானம் முடியாத இக்கட்டிடத்தின் அடித்தளத்தில் தங்கியிருந்த கட்டுமான ஊழியர்கள் உட்பட பலர் இடிபாடுகளுக்கிடையே சிக்கினர். தொடர்ந்து நான்காவது நாளாக மீட்புப் பணி நடந்து வருகிறது.
இந்தக் கோர விபத்தில் சிக்கி இதுவரை 28 பேர் பலியாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் மீட்புப்பணி தொடர்ந்து நடைபெறுவதால் பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
கட்டிடத்தின் மீது இடி விழுந்ததே விபத்திற்குக் காரணம் என கட்டுமான நிர்வாகம் விளக்கமளித்தது. ஆனால், போரூர் ஏரியை ஒட்டியுள்ள நிலத்தடி நீர் மட்டம் அதிகம் உள்ள பகுதியில் கட்டிடம் கட்டப்பட்டது தான் விபத்துக்கு முக்கிய காரணம் என்று குற்றம் சாட்டப்படுகிறது.
இதற்கிடையே, இடிந்து தரைமட்டமான கட்டிடத்திற்கு அருகே அதே போன்று மற்றொரு கட்டிடம் கட்டப் பட்டுள்ளது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதன் உறுதித் தன்மையை ஆய்வு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டது.
சென்னை பொதுப்பணித்துறை மேற்பார்வை பொறியாளர் ராமலிங்கம் தலைமையில் பொறியாளர்கள் 11 மாடி கட்டிடத்தின் வரைப்பட ஒப்புதலை பார்வையிட்டு, ஆய்வு பணியை தொடங்கினர்.
அதன்படி, தற்போது கட்டிடத்தின் உறுதி தன்மையின் மீது ஏற்பட்டுள்ள சந்தேகத்தினால் கட்டிடத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. காஞ்சீபுரம் ஆட்சியர் பாஸ்கரன் முன்னிலையில் சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். பாதுகாப்பு இல்லாதது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
திடீரென இடிந்து விழுந்த 5 மாடி கட்டடம்.. இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்க சான்ஸ்.. டெல்லி சோகம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications