கோவை: அங்கீகாரம் பெறாத 49 பள்ளிகளை மூட தமிழக அரசு உத்தரவு!
Subscribe to Oneindia Tamil
கோவை: கோவையில் அங்கீகாரம் பெறாமல் இயங்கி வந்த 49 மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கோவையில் அங்கீகாரம் பெறாமல் 49 மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள் இயங்கி வந்தது. இதையடுத்து அந்த பள்ளிகள் அங்கீகாரம் பெற கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அந்த பள்ளிகளின் நிர்வாகம் இதுவரை அனுமதி பெறவில்லை.
இதையடுத்து அந்த 49 பள்ளிகளையும் மூட மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். மேலும், அந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்கும் பணியையும் அந்தந்த பள்ளிகளே மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications