வேளாண் படிப்பு ரேங்க் பட்டியல் வெளியீடு.. திண்டுக்கல்லைச் சேர்ந்த ஆர்த்தி 200க்கு 200 மதிப்பெண்கள்!
வேளாண் படிப்புக்கான ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.இதில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டம்சத்திரத்தை சேர்ந்த ஆர்த்தி என்ற மாணவி 200க்கு 200 கட் ஆப் மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
Recommended Video
கோவை: வேளாண் படிப்புக்கான ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த ஆர்த்தி என்ற மாணவி 200க்கு 200 கட் ஆப் மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் 14 உறுப்பு கல்லுாரிகள் மற்றும், 26 இணைப்புக் கல்லுாரிகள் மூலம், 12 இளங்கலை படிப்புகள் வழங்கப்படுகின்றன.
தமிழ்நாடு வேளாண் பல்கலையில், இளங்கலை மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப வினியோகம், மே, 18 முதல் ஜூன், 17 வரை நடைபெற்றது.
2018 - 19ம் ஆண்டிற்கான இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு, 48 ஆயிரத்து, 682 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்நநிலையில் சிறப்பு பிரிவினருக்கான, மூன்று நாள் சான்றிதழ் சரிபார்ப்பு கடந்த 18ஆம் தேதி துவங்கியது.
இந்நிலையில் இதற்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. வேளாண் படிப்புக்கான ரேங்க் பட்டியலை கோவை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசாமி வெளியிட்டார்.
இதைத்தொடர்ந்து ரேங்க் பட்டியல் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இதில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த ஆர்த்தி என்ற மாணவி 200க்கு 200 கட் ஆப் மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
வேளாண் படிப்புக்கான தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களில் 8 இடங்களை மாணவிகளே பிடித்துள்ளனர். இதைத்தொடர்ந்து ஜூலை 7 ஆம் தேதி சிறப்பு பிரிவினருக்கான நேரடி கலந்தாய்வு நடைபெறும் என்றும் ஜூலை 9 ஆம் தேதி முதல் பொது பிரிவினருக்கான ஆன்லைன் கலந்தாய்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.