கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி கைது
கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.
Recommended Video
கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளதால் அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தப்பட்ட நிலையில் அவரை லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
பேராசிரியர் நியமனத்துக்கு துணைவேந்தர் கணபதி, ரூ.30 லட்சம் லஞ்சமாக கேட்டதாக சுரேஷ் என்பவர் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் துணை வேந்தர் கணபதி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத் துறை கணபதியை கைது செய்தனர்.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெறுவதற்கான ஆய்வுப்படிப்பில் ஈடுபட்ட லட்சுமி பிரபாகரனை கணபதி சாதி பெயரை சொல்லி திட்டியதாக அவர் கொடுத்த புகாரின் பேரில் அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.