உயிரைக் குடிக்கும் “சாணிப் பவுடர்” – தடையை மீறி கோவையில் விற்ற 14 பேர் கைது
கோவை: கோவையில் பொங்கலுக்கு வீடு மெழுக பயன்படும் சாணிப் பவுடர் விற்ற 14 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீட்டு விசேஷ நாட்களிலும், தை பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் வீடுகளில் சாணத்தைக் கரைத்து மெழுகி கோலமிடுவது வழக்கம். ஆனால் தற்போது மாட்டுச் சாணத்திற்குப் பதிலாக படு அபாயகரமான சாணிப் பவுடரை கோவை பக்கம் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். சாணிப் பவுடர் என்ற அபாயகரமான ரசாயாணப் பொருள் அடங்கியதாகும்.

கோவை மற்றும் சுற்றுப்பகுதிகளில் இந்த சாணிப்பவுடரை கலந்து குடித்து தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாணிப்பவுடர் விற்பனைக்கு போலீஸார் தடை விதித்தனர்.
இருப்பினும், மாடுகளை தேடிச் சென்று சாணியை எடுத்துவந்து வீடு, வாசலை மெழுகுவதை கட்டிலும் இந்த சாணிப் பவுடைரைக் கொண்டு மெழுகுவதையே பலரும் தொடர்கின்றனர்.
இதனால், தடை செய்யப்பட்ட சாணிப் பவுடர் கடைகளில் ரகசியமாக விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், கடைவீதி, காட்டூர், ரேஸ்கோர்ஸ், போத்தனூர், ரத்தினபுரி பகுதி போலீஸார் சனிக்கிழமை திடீரென மளிகை கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது சட்டவிரோதமாக சாணிப்பவுடர் விற்பனை செய்ததாக 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மொத்தம் 1.8 கிலோ சாணிப்பவுடரையும் பறிமுதல் செய்தனர்.












Click it and Unblock the Notifications