கோவையில் கடும் தண்ணீர் பஞ்சம்... அமைச்சர் வேலுமணியை முற்றைகையிட்ட மக்கள்
கோவை மாவட்டம் கோவைப்புதூர் பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கச் சென்ற அமைச்சர் எஸ்.பி வேலுமணியை பொதுமக்கள் தண்ணீர் கேட்டு முற்றுகையிட்டனர்.
கோவை: கோவையில் அமைச்சர் எஸ்.பி வேலுமணியை பொதுமக்கள் குடிநீர் கேட்டு முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அமைச்சர் வேலுமணி, கோவை அருகேயுள்ள கோவைப்புதூர் பகுதியில் நலத்திட்ட உதவிகளை வழங்கச் சென்றிருந்தார். அப்போது, அப்பகுதி வாழ் மக்கள் அமைச்சரை சூழ்ந்துகொண்டனர். அவர்கள் அமைச்சரிடம்,''நாங்கள் இங்கு வெற்றிலைக்கார வீதியைச் சேர்ந்தவர்கள். எங்கள் பகுதியில் உப்புத் தண்ணீர் விநியோகம் கூட சரியாக இல்லை.

உப்புத் தண்ணீர் கூட கிடைக்காவிட்டால் நாங்கள் எப்படித்தன் வாழ முடியும்? நாங்கள் அதிகாரிகளிடம் எத்தனை முறை இதுகுறித்துக் கேட்டாலும் அவர்கள் பதில் சொல்வதில்லை. தண்ணீரும் கிடைப்பதில்லை'' என பெண்கள் கோபத்துடன் அமைச்சரைக் கேள்வி கேட்டனர்.
உடனே அமைச்சர் அங்கிருந்த அதிகாரிகளிடம் இந்தப் பிரச்சனையைத் தீர்க்குமாறு உத்தரவிட்டார். அதன்பின் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
கோவையின் பல பகுதிகளில் பிப்ரவரி இரண்டாம் வாரம் முதற்கொண்டே குடிநீரும் உப்புநீரும் மக்களுக்கு கிடைப்பதில்லை என்ற புகார் வந்துகொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications