கோவை: சோமனூரில் ப்ளஸ் 2 மாணவர் தற்கொலை- ஆசிரியை மீது புகார்
கோவையில் தனியார் பள்ளி மாணவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது.
Subscribe to Oneindia Tamil
கோவை: சோமனூரில் ஆசிரியை திட்டியதால் 12ம் வகுப்பு மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆசிரியர் மீது மாணவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
உயிரிழந்த மாணவரின் பெயர் அருண் செல்வம் என்பதாகும். இவர் தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். நன்றாக படிக்கவில்லை என்று வேதியியல் ஆசிரியர் சங்கீதா தினசரியும் திட்டுவதாக வீட்டில் வந்து பெற்றோரிடம் அருண் செல்வம் கூறிவந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று தனது வீட்டில் தூக்கு போட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். இதனையடுத்து அருண் செல்வத்தின் பெற்றோர் வேதியியல் ஆசிரியர் சங்கீதா மீது புகார் அளித்துள்ளனர்.
இதையடுத்து புகாரின் பேரில் வேதியியல் ஆசிரியர் சங்கீதா மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications