சசிகுமார் கொலை.. வன்முறையில் ஈடுபட்ட இந்து முன்னணி.. 3 பேர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்
இந்து முன்னணியின் கோவை செய்தித் தொடர்பாளர் சசிகுமார் செப். 22ம் தேதி கொலை செய்யப்பட்டதையடுத்து ஏற்பட்ட வன்முறை வெறியாட்டத்திற்கு காரணமான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது,
கோவை: இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலைக்கு பின்னர் நடந்த இறுதி ஊர்வலத்தின் போது அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் ஊர்வலத்தில் வழியெல்லாம் கடைகளை அடித்து நொறுக்கி, வாகனங்களை தீவைத் கொளுத்தி வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
கோவை துடியலூர் சுப்ரமணியபாளையத்தைச் சேர்ந்தவர் சசிகுமார். 36 வயதான இவர், இந்து முன்னணியின் கோவை மாவட்ட செய்தித் தொடர்பாளராக இருந்தார். இவர் கடந்த செப்டம்பர் 22ம் தேதி இரவு வீட்டிற்கு திரும்பிய போது, திடீரென 4 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று வந்து அவரை நடு ரோட்டில் ஓட ஓட விரட்டி கொன்றது. ரத்த வெள்ளத்தில் சரிந்த சசிகுமார், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உயிரிழந்தார்.

இதனையடுத்து, இந்து முன்னணியினர் வன்முறையில் ஈடுபடத் தொடங்கினார்கள். பேருந்துகள் மீது கற்கள் வீசப்பட்டன. 20 பேருந்துகளின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. கடைகள், ஏடிஎம் இயந்திரங்கள் அடித்து சூறையாடப்பட்டன. இந்த வன்முறை வெறியாட்டத்தின் போது பாலசுப்பிரமணியம் என்ற போலீஸ்காரரும் படும்காயம் அடைந்தார்.
இந்த சம்பவத்தையடுத்து, வன்முறையில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்திய பின்னர், திருச்சி, வேலூர், மதுரை, சேலம் ஆகிய மாவட்டங்களில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, கோவை மாநகரில் வன்முறையில் ஈடுபட்டு பொதுச் சொத்துக்களை சேதப்படுத்திய 18 பேர் குண்டர் சட்டம் ஏற்கனவே பாய்ந்தது. இந்நிலையில், தற்போது மேலும், மகேந்திரன், சசிகுமார், மோகன்ராஜ் ஆகிய 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இதன் மூலம் சசிகுமார் கொலையையடுத்து நடந்த வன்முறை சம்பவத்தில் குண்டர் சட்டம் பாய்ந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications