ரேக்ளா பந்தயம் நடத்த வந்த அமைச்சர் வேலுமணியை விரட்டியடித்த இளைஞர்கள்.. கோவையில் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

கோவை கொடிசியா மைதானத்தில் ரேக்ளா பந்தயம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆயினும், அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் ரேக்ளா பந்தயம் தொடங்கியது. சுமார் 200 அதிக மாட்டு வண்டிகள் இதில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பல வீரர்கள் போட்டியை புறக்கணித்தனர். இதனால் 3 வண்டிகள் மட்டுமே பங்கேற்றன.

ஆனால் அங்கு, விரைந்து வந்த சுமார் ஆயிரம் இளைஞர்கள் ரேக்ளா பந்தய பாதையை மறித்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து கோவை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் அங்கு வந்து போராட்டக்காரர்களிடம் ஒலிபெருக்கியில் பேசி சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் அவர் விஷயத்தை பேச வரும் முன்பே குறுக்கிட்ட இளைஞர்கள், கோஷமிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.

Coimbatore youths send minister Velumani back

"வெளியே போ.. வெளியே போ.." என அவர்கள் ஆக்ரோஷமாக கோஷமிட்டனர். இதனால் போலீசார் கையை பிசைந்தனர். அங்கு அமைச்சர் வேலுமணியின் காரையும் இளைஞர்கள் முற்றுகையிட்டனர். அவரால் நகர முடியாத சூழல் ஏற்பட்டது. எனவே பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு நடுவே, வேலுமணி கார் கொடிசியாவிலிருந்து பின்வாசல் வழியாக வெளியேறியது. அதாவது இளைஞர்கள் வேலுமணியை விரட்டியடித்தனர்.

இதனால் அலங்காநல்லூர் போலவே கோவையிலும் அரசுக்கு அவமானமே பரிசாக கிடைத்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+