தீயில் கருகிய குடும்பம்... கந்து வட்டியை தடுப்போம் என்கிறார் நெல்லை கலெக்டர்
கந்து வட்டி கொடுமைக்காக 4 பேர் தீக்குளித்த நிலையில் கந்து வட்டியை ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நெல்லை ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறியுள்ளார்.
Recommended Video

திருநெல்வேலி: திருநெல்வேலியில் கந்து வட்டி கொடுமையால் தீ குளித்த 4 பேரில் மூவர் உயிரிழந்து விட்டனர். கந்து வட்டியை ஒழிக்க நடவடிக்கை எடுப்போம் என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறியுள்ளார்.
கடையநல்லூர் அருகேயுள்ள காசிதர்மம் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி இசக்கிமுத்து, தனது மனைவி சுப்புலட்சுமி, மகள்கள் 5 வயது மதிசரண்யா, ஒன்றரை வயதுள்ள அட்சய பரணியா ஆகியோர் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்ற அரங்கு முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நால்வரும் உடனடியாக மீட்கப்பட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி 4 பேரையும் பார்வையிட்டார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீ குளித்த நால்வரும் படுகாயமடைந்துள்ளனர். 70 சதவிகித காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றார்.

கந்து வட்டி கொடுமையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய ஆட்சியர், உதவி எண்கள் அறிவிக்கப்பட்டு பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். எனினும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் இரண்டு குழந்தைகளும் சுப்புலட்சுமியும் சிசிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications