For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாணவியிடம் பாலியல் பலாத்காரம்; கல்லூரி நிர்வாகி மீது பரபரப்பு புகார்

Google Oneindia Tamil News

தென்காசி: தென்காசி அருகே கல்லூரி மாணவியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட நிர்வாகியை காப்பாற்ற நிர்வாகமும் போலீசும் முயற்சிப்பதாக பெற்றோர்கள் புகார் கூறினர்.

நெல்லை மாவட்டம் தென்காசி அருகில் ஆய்க்குடியில் ஜெ.பி.கலை அறிவியல் கல்லூரியில் அண்மையில் சாரல் மினி மாரத்தான் போட்டி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் பங்கேற்க வந்த கேரளமாநிலத்தை சார்ந்த கல்லூரி மாணவியிடம் கல்லூரி நிர்வாகி(பாதிரியார்)ஒருவர் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து மாணவியின் புகாரின் பேரில், பெற்றோர் புதன்கிழமை கல்லூரியில் வந்து நியாயம் கேட்டனர்.

இதனால் கல்லூரியில் மாணவ,மாணவிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது.இதனைத்தொடர்ந்து மாணவ,மாணவிகள் போராட்டம் நடத்த முடிவுசெய்தனர்.இதனைத்தொடர்ந்து நிர்வாகம் கல்லூரிக்கு நான்கு நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டது.

இந்நிலையில் கல்லுரி நிர்வாகம் சம்மபந்தப்பட்ட பாதிரியாரை நிர்வாகம் பணிநீக்கம் செய்துவிட்டதாக கூறி மாணவியின் பெற்றோரை நிர்வாகம் சமாதானம் செய்துள்ளது. ஆனால் மாணவியின் பெற்றோர் அதனை ஏற்காமல் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

College administrator molesting girl student :Parents protest

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது;கல்லூரி நிர்வாகம் "அந்த பிரச்னையை பேசி தீர்த்து' விட்டதாக தெரிவித்தனர். இக்கல்லூரி காங்கிரஸ் பிரமுகர் ஒருவருக்கு சொந்தமானது.பின்னர் இக்கல்லுரியை அவர் சென்னையை சார்ந்த பிரபல கல்லூரிக்கு கொடுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

English summary
J.P Arts and Science college administrator allegedly molesting girl students after parents of one of the students registered a complaint in police .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X