For Quick Alerts
For Daily Alerts
Just In
சமையல் வேலை பார்த்துக் கொண்டே படித்த மாணவரின் பரிதாப முடிவு- வெந்நீர் கொட்டி பலி!
மதுரை: மதுரையில் கல்லூரி மாணவர் ஒருவர் உடலில் வெந்நீர் கொட்டியதால் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
உசிலம்பட்டி அருகே உள்ள வெள்ளமலை பட்டியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் வசந்த ராமன். இவர் அங்குள்ள கல்லூரியில் படித்து வந்தார்.
தனது படிப்புச் செலவுக்காக விடுமுறை நாட்களில் சமையல் வேலைக்கும் சென்று வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வசந்தராமன் சமையல் வேலைக்கு சென்றார்.
சமையல் வேலை பார்த்து கொண்டு இருந்தபோது அவரது உடலில் வெந்நீர் கொட்டியது. இதில் அவரது உடல் வெந்தது. படுகாயம் அடைந்த அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் வசந்தராமன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து உசிலம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Comments
English summary
College student died due to hot water fell down into his body when the time of part time cooking works in Madurai.
Story first published: Wednesday, September 17, 2014, 11:20 [IST]