சென்னை: ஓடும் காரில் செல்ஃபி எடுத்த போது விபத்து - ஒருவர் பலி; 3 பேர் படுகாயம்
சென்னை: மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் ஓடும் காரில் இருந்து தலையை வெளியே நீட்டி செல்ஃபி எடுக்க ஆசைப்பட்ட கல்லூரி மாணவன், விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே காரில் பயணித்த நண்பர்கள் 3 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த சுண்டைக்காய் பாளையம், சின்ன பீளமேடு பகுதியை சேர்ந்த சகாபுதீன் என்பவரின் மகன் பாசில்,20. இவர், வண்டலூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் பிரிவில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த சனிக்கிழமை விடுமுறை என்பதால், தன்னுடன் படிக்கும் சக நண்பர்களான சபீர் அகமது, பாசில், சமீர் ஆகிய மூவருடன் மாமல்லபுரத்திற்கு காரில் சென்றுள்ளார். காரை பாசில் ஓட்டியுள்ளார். பாசில் முன் சீட்டில் அமர்ந்துள்ளார். இந்நிலையில்,கிழக்கு கடற்கரை சாலையில் பட்டிபுலம் நோக்கி கார் சென்று கொண்டிருந்தது. அப்போது, ஓடும் காரில் இருந்தபடியே செல்ஃபி எடுக்க பாசில் ஆசைப்பட்டார்.
கார் ஓட்டிக்கொண்டிருந்த பாசில், நண்பர்களிடம் திரும்பி, எல்லோரும் தலையை வெளியே நீட்டுங்கள், நாம் செல்ஃபி எடுக்கலாம் என்றார். நண்பர்களும் செல்ஃபி எடுக்கும் ஆசையில் வேகமாக சென்ற காரின் உள்ளே இருந்து தலையை வெளியே நீட்டியுள்ளனர். செல்ஃபி எடுக்கும் மோகத்தில் கார் ஓட்டிக்கொண்டிருந்த பாசிலும் தலையை வெளியே நீட்டினார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த கார் மின்னல் வேகத்தில் பறந்தது. அதற்குள் கார் சென்ற வேகத்தில் சாலையில் பலமுறை பல்டி அடித்து தலைகீழாக கவிழ்ந்தது.
இதை பார்த்து அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து காரில் சிக்கிக் கிடந்தவர்களை வெளியே இழுத்தனர். பின்னர் 4 பேரையும் கேளம்பாக்கம் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாசில் நேற்று உயிரிழந்தார். நண்பர்கள் 3 பேரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சபீர் அகமது புகாரின் பேரில் மாமல்லபுரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இன்றைக்கு செல்ஃபி மோகம் அனைவரையும் பிடித்துள்ளது. செல்ஃபியினால் பலர் உயிரை இழந்துள்ளனர். ஓடும் காரில் தலையை வெளியே நீட்டி செல்ஃபி எடுத்தபோது மாணவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications