சென்னையில் பயங்கர ஆயுதங்களுடன் கல்லூரி மாணவர்கள் மீண்டும் மோதல்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் பயங்கர ஆயுதங்களுடன் கல்லூரி மாணவர்கள் இன்று மீண்டும் மோதிக் கொண்டதால் பதற்றம் ஏற்பட்டது.
சென்னையில் கல்லூரி மாணவர்களிடையேயான மோதல் தொடர் கதையாக நடந்து வருகிறது. இந்நிலையில் சென்னை மூலகொத்தளம் சிக்னலில் மாநிலக் கல்லூரி மற்றும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கும் இடையே இன்று மோதல் ஏற்பட்டது.

கத்தி உள்ளிட்ட பயங்க ஆயுதங்களுடன் இரு கல்லூரி மாணவர்களும் மோதிக் கொண்டனர். இதில் பெரம்பூர் ரயில்வே இன்ஸ்பெக்டர் வாகனத்தின் கண்ணாடி உடைந்தது.
இந்த மோதல் தொடர்பாக ஒரு மாணவரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவர்களிடை மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது சென்னையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications