அசாதாரண சூழல்.. இன்ஸ்பெக்டர்களுக்கு ஜார்ஜ் திடீர் உத்தரவு.. அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை
தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவி வருவதால் அது குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்று காவல் ஆய்வாளர்களுக்கு சென்னை ஆணையர் ஜார்ஜ் திடீர் உத்தரவிட்டுள்ளார். உயர் அதிகாரிகளுடனும் அவசர ஆலோசன
சென்னை: தமிழக அரசியல் சூழல் மோசமாகி உள்ளதால் சட்டம் ஒழுங்கு பற்றி விரிவான அறிக்கை தர வேண்டும் என்று சென்னை ஆணையர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஆட்சி அமைப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கலால் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. இதனால், சென்னையில் அசம்பாவிதம் எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக சட்டம் ஒழுங்கு நிலை குறித்து ஆய்வு செய்து விரிவான அறிக்கை விரைவில் சமர்பிக்க வேண்டும் என்று காவல் ஆய்வாளர்களிடம் சென்னை ஆணையர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து இன்று காலை காவல் துறையை சேர்ந்த உயர் அதிகாரிகளுடன் ஆணையர் ஜார்ஜ் ஆலோசனை நடத்தினார். இன்றும் தொடர்ந்து அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள் ஓபிஎஸ்ஸை சந்தித்து ஆதரவு தெரிவித்து வரும் சூழ்நிலையில், கூடுதலாக சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் கவனம் செலுத்தி வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நேற்றில் இருந்து, சென்னை முழுவதும் இருக்கும் தங்கும் விடுதிகளில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். விடுதிகளில் சந்தேகப்படும் வகையில் இருப்பவர்களிடம் அடையாள அட்டை கேட்டு பரிசோதனை செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications