கோவை: எச்ஐவி ரத்தத்தை மகனுக்கு செலுத்தியதாக மருத்துவமனை மீது பெற்றோர் புகார்
கோவை: தனியார் மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் கல்லூரி மாணவனுக்கு எச்.ஐ.வி. நோய் தொற்று ஏற்பட்டதாகக் கூறி மாணவனின் உறவினர்கள் கோவையில் நேற்று இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உதகை, அறவங்காடு பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன். இவரது 16 வயது மகன் மேட்டுபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ படித்து வருகிறார். சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்ட அந்த மாணவன், கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள கே.ஜி மருத்துவமனையில் கடந்த ஜனவரி மாதம் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
இந்நிலையில் மேல்சிகிச்சைக்காக மாணவன் வேலூர் சென்றபோது, அங்கு மாணவனின் ரத்தத்தில் எச்.ஐ.வி. நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவனின் பெற்றோர், இதற்கு, கோவை தனியார் மருத்துவமனையில் மாணவன் சிகிச்சை பெற்றபோது, அவருக்கு எய்ட்ஸ் நோய் பாதித்தவரின் ரத்தம் செலுத்தப்பட்டதே காரணம் எனக் கூறினர். இதனையடுத்து மாணவரின் உறவினர்கள் ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள கே.ஜி மருத்துவமனை எதிரில் நேற்று இரவு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து ரேஸ்கோர்ஸ் போலீஸார் விரைந்து வந்து மாணவனின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தினர்.
-
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
மக்களின் கண்ணோட்டமே உங்களை பிரபலமாக மாற்றுகிறது.. விஜய்க்கு கிருத்திகா உதயநிதி சூசக அட்வைஸ்! -
“ஒரு சாதாரண வக்கீல்” .. சீண்டிய ஜெயலலிதா.. ப.சிதம்பரம் செய்த சம்பவங்கள்! -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
"தமிழ்நாடு உங்களை மறக்காது" ஆளுநரிடம் சொல்லி ஸ்டாலின் தந்த பரிசு பாருங்க! உடனே RN ரவியின் பரவச பதில் -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
அரபு நாடுகள் மீது இனி தாக்குதல் கிடையாது.. மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்! முடிவுக்கு வரும் போர்? -
பக்கத்து நாட்டை தாக்க மாட்டோம்னு சொல்லி.. துபாய் விமான நிலையத்தை அட்டாக் செய்த ஈரான்! ஷாக் வீடியோ -
என்னடா இது அதிமுகவுக்கு வந்த சோதனை.. காலி நாற்காலிகளுடன் கூட்டம்.. நொந்துபோன கௌதமி












Click it and Unblock the Notifications