இரு பிரிவினரிடையே மோதல்- கலெக்டர் அலுவலகத்தில் பொது மக்கள் புகார்
இரண்டு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டதால் நெல்லை மாவட்டத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.
நெல்லை: ஆலங்குளம் அருகே இரு சமுதாயத்தினர் இடையே நடந்து வரும் மோதல் தொடர்பாக, நெல்லை கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
நெல்லை மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ளது கிடாரக்குளம் கிராமம். இங்கு இரு சமுதாயத்தைச் சேர்ந்த மக்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் இரு பிரிவினரும் புகார் செய்தததின் பேரில் விசாரணை நடந்து இரு பிரிவினரையும் சமாதானப்படுத்தி வந்தனர்.

ஆனால் தற்காலிகமாக அவர்கள் மோதலை கைவிட்டாலும் அவ்வப்போது மோதி கொள்வது வாடிக்கையாகி உள்ளது. இதனால் கிடாரக்குளம் கிராமத்தில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
இந்நிலையில் கிடாரக்குளம் மற்றும் அகரம் பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் மாலை நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டு மனு கொடுத்தனர். அந்த மனுவில், கடந்த மே 25ம் தேதி காலை 11 மணிக்கு எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த 2 பேரை மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் கட்டி வைத்து அடித்துள்ளனர்.
மேலும் அகரத்தை சேர்ந்த சுந்தர், மணிகண்டன் ஆகியோரை கிடாரக்குளத்தைச் சேர்ந்த சிலர் கடுமையாகத் தாக்கினர். எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை கொலை செய்து விடுவதாக அடிக்கடி அந்த மாற்றுச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மிரட்டி வருகின்றனர்.
எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவால் கலெக்டர் அலுவலகததில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கிடாரக்குளம் பகுதியில் போலீஸ் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications