தப்பான சாதி சான்றிதழை வைத்துள்ளாரா? சங்கரன்கோவில் வேட்பாளர் மீது பரபரப்பு புகார்
நெல்லை: சாதி சான்றிதழை மாற்றி கொடுத்துள்ளதாக எழுந்த புகாரை அடுத்து மாநில தேர்தல் ஆணையம் கலெக்டரை விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டசபைக்கு மே 16ம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்நிலையில் அதிமுக தலைமை கடந்த 4ம் தேதி 227 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்தது. இதில் 100க்கும் மேற்பட்டோர் புதுமுகங்கள் ஆவர்.

இதனால், தேர்தலில் சீட் கிடைக்கும் என எதிர்பார்த்த அதிமுகவினர் ஏமாற்றமடைந்து வேட்பாளர் மீதான புகார்களை கட்சி தலைமைக்கு பேக்ஸ் மூலம் அனுப்பி வருகின்றனர். இதில் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தனி தொகுதி வேட்பாளர் ராஜலெட்சுமி மீது பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர் வைத்துள்ள சாதி சான்றிதழில் குழப்பம் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
கடந்த உள்ளாட்சித் தேர்தலில் இந்த சாதி சான்றிதழை கொடுத்து தான் அவர் போட்டியிட்டாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதுகுறித்து சங்கரன்கோவில் காந்திநகரை சேர்ந்த தங்கராஜ் என்பவர் மாநில தேர்தல் ஆணையம் மற்றும் நெல்லை மாவட்ட ஆட்சியாளருக்கு அனுப்பியுள்ள புகாரில், ‘2016ம் சட்டமன்ற தேர்தலில் சங்கரன்கோவில் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராஜலெட்சுமியின் உண்மையான பெயர் அந்தோணி செல்வி.
இவர் கிறிஸ்தவ தாய், தந்தைக்கு பிறந்தவர். கிறிஸ்தவ பள்ளர் இனத்தை சேர்ந்தவர். அந்தோணி செல்வி என்ற பெயரை அரசிதழில் பெயர் மாற்றம் செய்துள்ளார். பள்ளி ஆவணங்களில், அசல் சான்றிதழ்களில் அந்தோணி செல்வி என்றே இருந்து வருகிறது.
மேற்படி விபரங்களை மறைத்து புளியங்குடி தனியார் கல்லூரியில் படித்து இந்து பள்ளர் என போலியாக சான்று பெற்றுள்ளார். இவர் 2014 உள்ளாட்சி தேர்தலில் தவறான சான்றிதழ் பெற்று வெற்றி பெற்றுள்ளார்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் புகாரைத் தொடர்ந்து, மாநில தேர்தல் ஆணையம் இது தொடர்பாக விசாரித்து அறிக்கை அனுப்பும்படி நெல்லை மாவட்ட ஆட்சியாளருக்கு உத்தரவிட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications