For Daily Alerts
Just In
மெர்சல் வசனம்.. மதுரை போலீஸில் வக்கீல் புகார்!
மெர்சலில் வழிபாட்டு தலங்கள் குறித்து சர்ச்சைக்குரிய வசனங்கள் பேசியதற்கு எதிராக நடிகர் விஜய் மீது மதுரை காவல் நிலையத்தில் வழக்கறிஞர் புகார் அளித்துள்ளார்.
மதுரை: மெர்சலில் வழிபாட்டு தலங்கள் குறித்து சர்ச்சையான வசனத்தை பேசிய நடிகர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மெர்சல் படத்துக்கு நீண்ட நாள்களாக பிரச்சினைகள் விடாது கருப்பாய் பின் தொடர்ந்த வந்த உள்ளன. ஆரம்பத்தில் தலைப்புக்கு பிரச்சினை, பின்னர் படம் வெளியாவதில் பிரச்சினை என இருந்தது. படம் வெளியான பிறகு, ஜிஎஸ்டி குறித்த கருத்துகளை நீக்க கோரி பாஜகவினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் விஜய் தந்தையாக நடித்த கதாபாத்திரத்தில் ஊருக்கு கோயில் கட்டுவது குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பேசியதாக வழக்கறிஞர் முத்துகுமாரி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக விஜய் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
Comments
English summary
An Advocate gave complaint against Actor Vijay in Madurai Police Station because of his dialogues in Mersal on religious worships goes controversy.
Story first published: Monday, October 23, 2017, 14:13 [IST]