வளையல் அனுப்பி வைக்கிறோம், மோடியை போட்டுக்கச் சொல்லுங்க.. காங். அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: மோடி பிரதமராக வந்த பிறகு எல்லையில் 135 ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டபோது, பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கை சேலை கட்டுமாறு கூறினார் ஸ்மிருதி இராணி. இப்போது பிரதமர் மோடியை வளையல் போடச் சொல்கிறோம் என்று கூறியுள்ளார் அகில இந்திய மகிளா காங்கிரஸ் தேசிய செயலாளர் ஹசீனா சையத்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில்,

முன்பு ஜனநாயக முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் எல்லையில் ஒரு ராணுவ வீரர் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்ட சமத்தில், இப்போதைய அமைச்சர் ஸ்மிரிதி இரானி, பிரதமர் மன்மோகன்சிங்கை வளையல் அணிய சொல்லுங்கள் என்றார்.

 Congress asks Modi to wear Bangles

சுஷ்மா சுவராஜோ, நாங்கள் ஆட்சியில் இருந்து இருந்தால் 1 வீரரின் தலைக்குப்பதிலாக 10 பேரின் தலையை எடுத்திருப்போம் என்றார். இன்று நிலைமை என்ன?

ராணுவ வீரர்களின் தலையை பறி கொடுத்து நாட்டை தலைகுனிய வைத்துள்ளார் மோடி. பா.ஜ.க ஆட்சியில் 135 ராணுவ வீரர்கள் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார்கள். எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லையே. எல்லை பாதுகாப்பு படை வீரர்களை மாவோயிஸ்டுகள் சுட்டு கொல்கிறார்கள்.

எனவே நீங்கள் சொன்னதையே நாங்கள் திருப்பி சொல்கிறோம். பிரதமரை வளையல் அணிய சொல்லுங்கள். வளையல் தட்டுப்பாடாக இருந்தால், சொல்லுங்கள், நாங்கள் அனுப்பி வைக்கிறோம் என்று தான் ஸ்மிதிரிஇரானிக்கு அனுப்ப இருக்கிறோம். அவர் பிரதமருக்கு அனுப்பி வைக்கட்டும் என்று சாடியுள்ளார் ஹசீனா சையத்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+