தமிழிசை நக்கல் நையாண்டி.. ஜோதிமணி கிண்டல் கேலி.. டிவிட்டரில் கலகல!
சென்னை: லோக்சபாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியது குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் சிலாகித்து டிவீட் போட, அதை கிண்டலடித்து பதில் டிவீட் போட்டுள்ளார் காங்கிரஸ் பிரமுகர் ஜோதிமணி.
லோக்சபாவில் ராகுல் காந்தி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அன்று இரவு அதற்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்துப் பேசியதை பாஜகவினர் சிலாகித்துப் பாராட்டி வருகின்றனர்.
தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜனும் மோடி பேச்சை சிலாகித்து டிவீட் போட்டிருந்தார். அதற்கு பதிலடி கொடுத்துள்ளார் காங்கிரஸ் பிரமுகர் ஜோதிமணி.
கண்டபடி பேச்சு,,கட்டிப்பிடிப்பு,.. கண்ணடிப்பு,,என்று களங்கம் ஏற்படுத்தி..கலங்கி நின்ற ராகுலை.....தன் கலக்கல்..பேச்சால்..கலங்கடித்தார் பிரதமர்....
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) July 20, 2018
டாக்டர் தமிழிசை போட்டிருந்த டிவீட்டில், கண்டபடி பேச்சு, கட்டிப்பிடிப்பு, கண்ணடிப்பு என்று களங்கம் ஏற்படுத்தி.. கலங்கி நின்ற ராகுலை.. தன் கலக்கல் பேச்சால் கலங்கடித்தார் பிரதமர் என்று சிலாகித்துக் கூறியிருந்தார்.
அப்படியா?! கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல முடியாம ,பத்து லட்ச ரூபாய்க்கு கோட் போடறவரு நான் ஏழைத்தாயின் மகன்னு கதறி அழுத அந்த கண்கொள்ளாக் காட்சி 😃 https://t.co/WiQoEO3PNn
— Jothimani (@jothims) July 21, 2018
இதற்கு ஜோதிமணி பதிலடியாக ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில், அப்படியா?! கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல முடியாம, பத்து லட்ச ரூபாய்க்கு கோட் போடறவரு நான் ஏழைத்தாயின் மகன்னு கதறி அழுத அந்த கண்கொள்ளாக் காட்சி என கிண்டலடித்துள்ளார்.