காங்கிரஸ் வரவே வராது; பாஜக வந்தால் நல்லா இருக்காது: குழப்பிய டி.ராஜா

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: இந்தியா இந்த அளவுக்கு பொருளாதார தேக்க நிலையில் உள்ளதற்கு மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சிதான் காரணம். அவர்களின் திறமையற்ற பொருளாதார கொள்கைகள்தான் நாட்டை பின்னோக்கி இழுத்து சென்றுவிட்டன.
இதனால் காங்கிரசை தோற்கடிக்க மக்கள் ஒன்றிணைந்துள்ளனர். அக்கட்சி தனித்துவிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைவது உறுதி.
இந்த நிலைமையை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு ஆட்சியை பிடிக்க பாஜக துடித்துக்கொண்டுள்ளது. பாஜக ஆட்சிக்கு வருவது நாட்டின் நலனுக்கு சரியாக இருக்காது. தமிழ்நாட்டிலோ தேசிய அளவிலான தெளிவான பார்வை கொண்ட ஒரு கட்சியும் இல்லை. கொள்கை நெருக்கடியில் அவை சிக்கிக்கொண்டுள்ளன.
பாஜக குறித்தும் அதன் வகுப்புவாதம் குறித்தும் திமுக, அதிமுக ஆகிய இருகட்சிகளுமே பேசுவதில்லை. தேமுதிக, பாமக, மதிமுக ஆகிய கட்சிகள் ஒருபடி மேலேயேபோய் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளன. காங்கிரசும் வரமுடியாது, பாஜக வந்தாலும் நன்றாக இருக்காது என்றார்.
சரி.. யார்தான் ஆட்சி செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு, இந்த சூழ்நிலையில் மாற்று கொள்கைகள் உடைய அரசை இடதுசாரிகளால் மட்டுமே அமைக்க முடியும். என்று டி.ராஜா தெரிவித்தார்.
-
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி!












Click it and Unblock the Notifications