கர்நாடக குதிரை பேரம்.. பிரதமர் மோடி விசாரணை நடத்த காங் கோரிக்கை
கர்நாடகத்தில் குதிரை பேரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
Recommended Video

சென்னை: கர்நாடகத்தில் குதிரை பேரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
கர்நாடகா தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலவியது. இதையடுத்து எண்ணிக்கை அடிப்படையில் எடியூரப்பாவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

மேலும் 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் வஜுபாய் வாலா உத்தரவிட்டார். இதை எதிர்த்து காங்கிரஸ்- ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சி உச்சநீதிமன்றத்தை நாடியது.
எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க ஒரே ஒரு நாள் மட்டுமே நேரம் வழங்கப்பட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜகவினர் முயற்சித்தனர்.
104 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள போதிலும் பாஜக மூத்த தலைவர்களோ எங்களுக்கு 120 பேர் ஆதரவு தெரிவிப்பர் என்று கூறியிருந்தனர். இந்நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் ரெட்டி சகோதரர்கள், எடியூரப்பா, அவரது மகன் ஆகியோர் பணம், அமைச்சர் பதவி ஆசை காட்டி மூளை சலவை செய்த ஆடியோ காட்சிகளை காங்கிரஸ் செய்தி சேனலில் வெளியிட்டது.
இதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி முடியாமல் கட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டுவிடும் என்பதால் எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து குமாரசாமியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையில் குதிரை பேரத்தில் ஈடுபட்டவர்கள் மீது பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
-
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
வன்னியர் மட்டும் வாழக் கூடாதா? காங்கிரஸ் கட்சிக்குள் வெடித்த மோதல்! சீனியர் தலை போட்ட பரபர மீட்டிங்! -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
கேரளா தலையெழுத்தை தீர்மானிக்கும் "அந்த" சில ஆயிரம் வாக்குகள்.. கரையேறுமா காங்கிரஸ்? -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி












Click it and Unblock the Notifications