கர்நாடக குதிரை பேரம்.. பிரதமர் மோடி விசாரணை நடத்த காங் கோரிக்கை
கர்நாடகத்தில் குதிரை பேரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
Recommended Video

சென்னை: கர்நாடகத்தில் குதிரை பேரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
கர்நாடகா தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலவியது. இதையடுத்து எண்ணிக்கை அடிப்படையில் எடியூரப்பாவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

மேலும் 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் வஜுபாய் வாலா உத்தரவிட்டார். இதை எதிர்த்து காங்கிரஸ்- ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சி உச்சநீதிமன்றத்தை நாடியது.
எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க ஒரே ஒரு நாள் மட்டுமே நேரம் வழங்கப்பட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜகவினர் முயற்சித்தனர்.
104 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள போதிலும் பாஜக மூத்த தலைவர்களோ எங்களுக்கு 120 பேர் ஆதரவு தெரிவிப்பர் என்று கூறியிருந்தனர். இந்நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் ரெட்டி சகோதரர்கள், எடியூரப்பா, அவரது மகன் ஆகியோர் பணம், அமைச்சர் பதவி ஆசை காட்டி மூளை சலவை செய்த ஆடியோ காட்சிகளை காங்கிரஸ் செய்தி சேனலில் வெளியிட்டது.
இதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி முடியாமல் கட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டுவிடும் என்பதால் எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து குமாரசாமியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையில் குதிரை பேரத்தில் ஈடுபட்டவர்கள் மீது பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications