"அல்சர்" வரப் போகுது.. சபாநாயகரிடம் கெஞ்சிய காங்கிரஸ் தலைவர்!
சென்னை: சட்டசபையை நேரத்தோடு முடிக்குமாறும், இல்லாவிட்டால் உறுப்பினர்களுக்கு அல்சர் வந்து விடும் என்றும் சட்டசபை காங்கிரஸ் தலைவர் கே.ஆர். ராமசாமி கூறியதால் சபாநாயகர் தனபால் டென்ஷனாகி விட்டார்.
சட்டசபையில் இன்று நடந்த விவாதத்தின்போது குறுக்கிட்டுப் பேசிய கே.ஆர் ராமசாமி, பேரவைத் தலைவர் பேரவையை நேரத்தோடு முடிக்க வேண்டும். இல்லாவிட்டால் எங்களைப் போன்றவர்களுக்கு பசியின் காரணமாக அல்சர் நோய் வந்துவிடும் என்றார்.

இதைக் கேட்டு கோபமடைந்த சபாநாயகர் தனபால், இப்படியெல்லாம் பேசக் கூடாது. உறுப்பினர்களுக்கு சட்டசபை கேன்டீனில் உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு போய் சாப்பிட்டு விட்டு கூட்டத்தில் கலந்து கொள்ளலாம் என்றார். அப்போது சில உறுப்பினர்கள் எழுந்து எங்களுக்கு சாப்பாடு தேவையில்லை. கூட்டத்தை சீக்கிரம் முடிங்க என்று சத்தம் போட்டுக் கூறினர்.
இதைக் கேட்டு மேலும் கோபமடைந்த சபாநாயகர், சாப்பாடு அனைவருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் சாப்பிட்டு விட்டு வரலாம். இல்லாதவர்கள் குறித்து எனக்குக் கவலை இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications